If U Want New Endhiran Stills And Story

Enter your email address:

Delivered by FeedBurner

Search via This..

Custom Search

January 17, 2009

எந்திரன் தி ரோபோ " - படத்தின் முன்விமர்சனம் + கதை.

எந்திரன் தி ரோபோ " - படத்தின் முன்விமர்சனம் + கதை.

வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் `எந்திரன்' படக்கதை என்ன? என்பது வெளியே தெரிந்து விட்டது.

டைரக்டர் ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி- ஐஸ்வர்யாராய் நடிக்கும் `எந்திரன்' படப்பிடிப்பு மள, மள வென நடந்து வருகிறது.

இந்தியாவின் அதிக பட்ச, பிரமாண்ட பட்ஜெட் படமான `எந்திரன்' படக் கதையை எவ்வளவோ ரகசியமாக பாதுகாத்து வந்தும் விஷயம் வெளியே கசிந்து விட்டது.

`எந்திரன்' படக்கதை இது தான்!

ரஜினி ஒரு விஞ்ஞானி. அவர் புதுவகையான ஒரு `ரோபோ'வை கண்டு பிடிக்கும் முயற்சியில் இருக் கிறார்.

வரும் 2,200ம் ஆண்டில் `ரோபோ' எப்படி இருக்கும்ப அது என்னவெல்லாம் செய்யும் என்பதை கற் பனையாக வைத்து, முடி வில் அவர் ஒரு எந்திர மனிதனை பிரமிக்கும் வகையில் கண்டு பிடித்து விடுகிறார்.

இதன் மூலம் அவர் உலகிலேயே மிகவும் தலை சிறந்த விஞ்ஞானி என்ற பட்டத்தை பெறுகிறார்.

ரஜினி கண்டுபிடித்த `ரோபோ' எந்திரமும் ரஜினி போலவே உருவம் கொண் டது என்பது படத்தின் விசேஷ அம்சமாகும்.

இதன் மூலம் உலக நாடுகளில் ரோபோ தயாரிப்பு விஞ்ஞானிகளில் ரஜினி தவிர்க்க முடியாத மாபெரும் விஞ்ஞானியாக புகழ் பெற்று விடுகிறார்.

இதற்கிடையே ரஜினி- ஐஸ்வர்யாராய் இடையே காதல் மலர்கிறது. இருவரும் ஆடிப்பாடி மகிழ் கின்றனர். இந்த நிலையில் ரஜினி கண்டு பிடித்த `ரோபோ' வாலேயே அவரது காதலுக்கு பிரச்சினை ஏற்படுகிறது.

ஆமாம்! அந்த அரிய வகை ரோபோவை ஒரு வில்லன் கடத்திக் கொண்டு போய் விடுகிறான்.

வில்லன் கையில் சிக்கிய `ரோபோ' அவன் இஷ்டப்படி நடக்க ஆரம்பித்து விடுகிறது. ரஜினி பேச்சை கேட்க மறுத்து விடுகிறது.

இதன் மூலம் ஐஸ்வர்யாராய் காதல் உள்பட ரஜினி வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சினையாகி விடு கிறது.

ஒரு வழியாகப் போராடி, முடிவில் அந்த ரோபோவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றுப் புள்ளி வைக்கிறார் ரஜினி.

இந்தப் படத்தில் ரஜினி, ஐஸ்வர்யா ராய் சந்திப்பு மற்றும் காதல் காட்சிகள் மட்டுமே `அவுட்டோர்' படப்பிடிப்புகளில் நடத்தப் படுகிறது.

எந்திரனின் `ரோபோ' ஏற்கெனவே தயாராகி விட்ட நிலையில் அதனை மும்பையில் ஒரு பங்களாவுக்குள் ரகசியமாக அடைத்து வைத்திருக்கிறார்கள்.

`ரோபோ'வுக்கு `அவுட் டோர்' சூட்டிங் கிடையாது. இந்த `ரோபோ' சிறியவர் முதல் பெரியவர் வரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் பல வகை அட்டகாசங்களைச் செய் கிறது.

`ரோபோ' வில்லன் கையில் கிடைக்கும் போது `இடைவேளை' விடுகிறார்கள். இதன் பின்னர் வில்லன் சொல் படி ஆடும் `ரோபோ' ஒவ்வொரு காட்சியிலும் ஏகப்பட்ட காமெடி ரகளை பண்ணுகிறது.

ரோபோவும், ஐஸ்வர்யாராயும் ஆடிப் பாடும் ஒரு காதல் காட்சி `கம்ப்ïட்டர் கிராபிக்ஸ்' யுக்தியில் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கப்போகிறது.

இந்தப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இது வரைஇல்லாத அளவுக்கு இசையில் `காமெடி' கலந்து பல புதுமையான டிïன்களை உருவாக்கி உள்ளார்.

இதற்கிடையே எண்ணூர் துறை முகத்தில் ஐஸ்வர் யாராயை ரோபோ காதலிக்கும் காமடி காட்சி கள் படமாக்கப்பட்டு உள் ளன. `ரோபோ' வின் காதல் தொல்லை பற்றி விஞ்ஞானி ரஜினியிடம் ஐஸ்வர்யா ராய் புகார் செய்கிறார். உடனே ரஜினி ரோபோவிடம் ஒழுங்காக இரு இல்லா விட்டால் பிரிச்சு போட்டுருவேன் என்று எச்சரிக்கப்பட்டது போன்று அக் காட்சிகள் எடுக்கப்பட்டன.

குலுமனாலியில் ரஜினி- ஐஸ்வர்யாராய் காரில் காதல் செய்வது போல் காட்சிகள் விரைவில் படமாக்கப்படுகின்றன. இதற்காக ரூ.90 லட்சம் செலவில் புதிய `பென்ஸ்' கார் வாங்கப்பட்டு உள்ளது.

எந்திரன் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் உருவாகிறது. `ரோபோ' செய்யும் சேஷ்டைகளுக்கு மொழியே தேவையில்லை என்பதால் உலக அளவில் இந்தப்படம் மிகப் பெரிய வசூல் சாதனையை ஏற் படுத்தும் என தெரிகிறது.

`எந்திரன்' அடுத்த 2010-ம் ஆண்டு ஜனவரி மாத வாக்கில் ரசிகர்களை மகிழ்விக்கும் வண்ணம் உருவாகி வருகிறான்.

எந்திரன்-தி ரோபோ விமர்சனம்

எந்திரன்-தி ரோபோ விமர்சனம்
தலைவர் மீண்டும் ஜெயித்து விட்டார், சந்திரமுகி குதிரைன்னா, இயந்திரன் பறக்கும் குதிரை, குசேலனுக்காக ரஜினிக்கு எதிரா கொடி பிடிச்ச எல்லோரும், அதை கொடியிலே பணத்தை அள்ளுவாங்க. அடுத்து நேரா விமர்சனம் தான்


கதை படி சூப்பர் ஸ்டார் ரஜினி அமெரிக்கா நாசாவிலே விண்வெளி ஆராட்சியாளர் பணியை செய்து கொண்டு வரும் அவர்,செவ்வாய் கிரகத்திற்கு சென்ற பீனிக்ஸ் விண்கலத்தை வடிவமைத்த குழுவில் பணி ஆற்றுகிறார்

விண்கலம் மேலே செல்லும் பொது அதிலே தொழில் நுட்ப கோளாறு ஏற்படுகிறது, அதை சரி செய்யும் முயற்சியில் அவருக்கும் ரஷ்யா ஆரட்சியாளருக்கும் தீர்வு கொடுப்பதில் தகராறு, அவன் இந்தியாவையும்,இந்தியர்களையும் தரக்குறைவாக பேசி விட, அதற்க்கு தீர்வு கொடுத்து விட்டு வீட்டுக்கு செல்கிறார்.இந்தியாவை பற்றி பேசிய பேச்சிலே பாதித்த சூப்பர் ஸ்டார், விடுமுறை எடுத்து விட்டு சென்னைக்கு வருகிறார், வரும் பொது தன் சொந்த படைப்பான ரோபோவையும் எடுத்து கொண்டு வருகிறார்.வருகிற தலைவர் சென்னை திருவேல்லிகேணியிலே தங்குகிறார்.


ஐயர் ஆத்து மாமியின் மகளாக ஐஸ்வர்யாராய், அவளின் அக்காள் கணவரின் கொடுமை தாங்க முடியாமல் குடும்பமே தற்கொலை முடிவு எடுக்கிறார்கள், அவர்கள் உணவில் எடுத்து கலந்து இருப்பதை ரோபோவின் மூலம் அறிந்து அவர்களை காப்பாற்றுகிறார்.அவர்களின் பிரச்சனைகளை ரோபோவின் உதவியுடன் தீர்த்து வைக்கிறார்.இப்படி எல்லாம் எந்த படத்திலும் வந்ததா ஞாபகம் இல்லை

ஐஸ்வர்யா ராயின் ஊனமுற்ற சகோதரனுக்காக பெட்ரோல் இல்லாத தானியங்கி வண்டி ஒன்றை தயாரித்து கொண்டுகிறார், அது மிகவும் பிரபலமடைய தலைவரிடம் நிறைய பேர் வருகிறார்கள்,அவர்களுக்கு இலவசமாக அந்த தொழில் நுட்பத்தை கொடுக்கிறார்.தலைவரின் புகழ்அமெரிக்க அதிபரை விட வேகமாக வளர்கிறது.


ஐஸ்வர்யாராய் தலைவர் மீது காதல் வயப்படுகிறாள்,அப்படி வரலைன்னா தமிழ் சினிமாவிற்கே களங்கம்.இந்த நிலையில் தலைவரின் வளர்ச்சி பிடிக்காத உள்ளூர் மோட்டார் வாகன தாயாரிப்பாளர்கள் அவரை தீர்த்து கட்ட

ரவுடிகளை ஏற்பாடு செய்கிறார்கள்.வில்லன் இல்லன்னா படம் எப்படி நகர முடியும்.தலைவர் படத்திலே சண்டை இல்லன்னா சக்கரை பொங்கலுக்கு உப்பு வச்சி சாப்பிடுற மாதிரி இருக்கும், ரவுடிகளுக்கு ஒரு காட்டு காட்டுகிறார் ரோபோவின் உதவியோடு, கொஞ்ச நாள்ல சண்டை காட்சி திருட்டு தனமா வெளியே வரும் அதனாலே அதை விளக்க வேண்டிய அவசியம் இல்லை

இதற்கிடையில் நாசாவின் அணு ரகசியங்கள் திருட்டு போகின்றது, அந்த பழி தலைவர் மேலே விழுகிறது,தலைவர் விடுமுறையில் சென்னையில் இருப்பதை அறிந்து கொண்டு அவரை கைது செய்ய அமெரிக்கா துப்பறியும் அதிகாரிகள் இந்தியா வருகிறார்கள்.



மத்திய அரசாங்கத்திலே வேலை பார்க்கும் அதிகாரி,உள்ளூர் வாகன தயாரிப்பாளரிடம் மத்திய அரசுக்கு வந்த ரகசிய உத்தரவை தெரிவிக்கிறார். சந்தப்பத்தை பயன் படுத்தி உள்ளூர் வில்லன், உள்ளூர் பத்திரிக்கைகள்,தொலை காட்சி நிறுவனங்கள் மூலமாக அந்த செய்தியை பிரபலப்படுத்துகிறார், செய்திகளில் அவர் சர்வதேச குற்றவாளியாக சித்தர்க்கப்படுகிறது.உண்மை என நம்பிய ஐஸ்வர்யாராய் வழக்கம் போல எல்லா கதாநாயகிகளும் செய்வது போலே அவரை விட்டு பிரிந்து விடுகிறார்.


மத்திய அரசாங்கம், சர்வதேச போலீஸ், அமெரிக்கா எப்.பி.ஐ தேடுவதோடு இடைவேளை. டீ,காபி குடிக்க போறவங்க போயிட்டு வாங்க.இரண்டாவது பாதியில் தனக்கு எதிரான சதியை முறி அடித்து, ஐஸ்வர்யாராயும் கை பிடிப்பதே( படத்துக்காக) மீதி கதை


இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலே முதலில் ரஜினியை இழிவு படுத்திய தன் சக நண்பரிடன் இருந்து மின்-அஞ்சல் வருகிறது, அவன் விடுமுறைக்காக மேக்ஸ்சிகோ சொன்று இருப்பதாகவும், அவனை உடனடியாக வந்து பார்க்கும் படி மெக்சிகோ விலாசத்தை அனுப்புகிறார், அவனை தேடி மெக்சிகோ செல்கிறார் ரஜினி, ரோபோவின் உதவியுடன் சென்னை விமான நிலையத்தில் நுழைந்து மெக்சிகோ சொல்கிறார்

அவரை தேடி அங்கு செல்லும் ரஜினி, அவரை யாரோ கொலை செய்து விடுகிறார்கள், அவர் இறக்கும் தரு வாயில் அவரிடம் இருந்து சில உண்மைகளை தெரிந்து கொள்கிறார், இந்த கொலை பழியும் தலைவர் மீது விழுகிறது.


இது வரையில் வில்லன்களுக்கு ஓடி ஒழிந்த ரஜினி உண்மையை தெரிந்து கொண்டதால், அவனை தேடி செல்ல முடிவு எடுக்கிறார், முதலில் வில்லன் இருப்பிடம் தேடும் தலைவர் அவன் இந்தியாவிலே இருப்பது தெரிய வருகிறது, மீண்டும் ரோபோவின் உதவியால் சென்னைக்கு வருகிறார். சென்னையில் பழைய எதிரியும், புதிய எதிரியும் ஓன்று சேருகிறார்கள்(பழசு உள்ளுறு, புதுசு வெளியூரு).இருவரின் சதி திட்டங்களை முறியடித்து வெற்றி பெறுவதே இறுதி கட்டம்

பாடல்கள் இன்னும் கொஞ்ச நாள்ல இணைய தளத்திலே வலம் வரும், அதனாலே அதை பத்தி பேச வேண்டிய அவசியம் இல்லை.இன்னொரு முக்கியமான விஷயம் படத்திலே ரோபோ பேசுகிற எல்லாமே குத்து வசனம் தான், ஒன்னு இப்ப சொல்லுறேன், மீதி படம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.


தூங்கும் போது அடிச்சா கேடி, தூங்கிட்டே அடிச்சா கில்லாடி

பிரமாண்டம், பிரமிப்பு, திகைப்பு, விறுவிறுப்பு, ரஜினி கலந்து தரப்பட்ட உலகத்தரம் வாய்ந்த தமிழ் படம் இயந்திரன்

Free Subscribetion

Click This More Get....